எனது பக்கங்கள்






இந்த அரசும் , அரசியலும் ஒரு சார்பாகவே பணம் படைத்தவர்களுக்கு சாதகமாகவே இருக்கிறது ஆனால் பெரும் எண்ணிக்கையில் உள்ளவர்கள் இங்கு ஏழைகளே. அவர்களின் பலமே ஒற்றுமை தான் அந்த ஒற்றுமையை சாதி ,மதம் ,மொழி, போன்றவை துண்டாட பார்க்கின்றன. நாம் அனைவரும் பாட்டாளி வர்க்கம் என்று ஓன்று படுவோம். நமக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்து போராடுவோம்.



Sep 25, 2010

ஏசு சொன்ன மீட்பர் மார்க்ஸ் தான்

மோசஸ் தான் முதலில் பத்து கட்டளைகளை மக்களுக்கு வழங்கினார் அவர் புரட்சிகர கருத்துகளை முதன் முதலில் முன் வைத்தார். அவர் வழியில் வந்த ஏசு இப்போது கடவுளின் சாம்ராட்சியத்தை முதன் முதலில் இந்த உலகில் நிறுவினார், என்று இப்போது சொல்லபட்டாலும் அவர் வாழ்ந்த காலத்தில் முற்போக்கானவராக  இருந்தார். கோயிலை வியாபார பொருளாக வைத்திருந்ததை வெளிப்படையாக எதிர்த்தார். அவர் சமயம் என்ற பெயரில் மக்களை சுரண்டபடுவதை எதிர்த்தார்.

Sep 20, 2010

திரு.ஞானிக்கு 'ஒ போடுவோம்'

பல காலமாக ஒற்றை ஆளாக துனிச்சலோடு அரசியல் வாதிகளின் போலி முகத்திரையை கிழித்து வரும் 'வாழும் பாரதி'யாக தான் இன்று திரு .ஞானி நமக்கு தெரிகிறார். இவருடைய 'ஒ பக்கங்கள்' பல பத்திரிக்கைகளில் தொடர்ந்து வெளி வருவது என்பது எங்கும் நடக்காத அதிசியம் தான். இவரை போன்ற அரசியல் விமர்சகர்கள் இருக்கும் சமூகம் நல்ல நீரோட்டம் உள்ள சமூகமாக தான்  இருக்கும்.  தன் மனதில் தோன்றியதை  தெளிவாக தையிரமாக எடுத்து வைக்கும் இவரை நாம் வழிகாட்டியாக எடுத்து கொள்ள வேண்டும். 


காஷ்மீர் நெருப்பு மன்மோகன் மீது தாவுகிறது

காஷ்மீர் பிரச்சனையில் மத்திய அரசு என்ன தான் மூடி மூடி வைத்தாலும் தீ பிடித்து எரியும் வைக்கோல் போரில் கம்பளியை போட்டு அணைப்பது போல தான் முடியும் அந்த வைக்கோல் போர் எரிவதொடு கம்பளியும் ஏறிந்து அதை அனைப்பவனையும் எறிக்கதான் போகிறது காஷ்மீரில் பற்றியுள்ள சுதந்திர தாகம் என்னும் அழியாத நெருப்பு. இலங்கை தமிழர்களின் துயரங்களை பேசும் நாம் முதலில் காஷ்மீர் மக்களின் சுதந்திர போராட்டங்களை பற்றியும் பேச வேண்டும்.
காஷ்மீர் சுதந்திர போராட்டத்தை ஆதரிக்காதவர்கள் கூட இன்று அந்த மக்கள் படும் துன்பங்களை பற்றியும் அங்கு சுட்டு கொள்ளப்படும் குழந்தைகள், பெண்கள் பற்றியும் பேச ஆரம்பித்து விட்டனர். இது இந்திய முதலாளிகளுக்கு சப்பை கட்டு கட்டும் இந்த ஊடக உலகம் மூடி - மூடி வைத்தாலும் வெளியே உண்மைகள் தெரிய தான் செய்கிறது

Sep 19, 2010

உயர் நீதிமன்றத்தில் தமிழுக்காக புது தில்லியில் வழக்கறிஞர்கள் போராட்டம்

கருணாநிதி -  தமிழர்கள் விரோதி

கருணாநிதி தன்னை எப்போதும் முத்தமிழ் காவலராகவே அடையாளப்படுத்தி கொள்ள விரும்புவார். அதற்கேற்றார் போல தமிழகத்திற்கு அறிவிக்கப்படாத அரசவை கவிஞர்களான வாலி , வைரமுத்து போன்றோரும் அவரை எப்போதும் இவர் ஒளிபதிவு கூட சுவர்களுக்குள் முடங்கி கிடந்த தமிழை இவர் தான் பாமரரும் பருகும் படி அனைவருக்கும் தமிழை தந்தவர் என்றும் தமிழை காக்க ,தமிழ் சமூகம் காப்பதுவும் தான் அவரின் தலையாய  பணி  என்று  போற்றி   புகழ்வார்கள். இவர்களின் பிடியில் இருந்து தமிழ் சமுதாயம் விடுபட திணறுவது என்பது தனிக்கதை. அது எவ்வளவு  துரம் மிகவும் தவாறான தகவல் என்பது உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் தமிழர்   தன்  தாய் மொழியாம் தமிழை  உயர் நீதிமன்ற வழக்கு மொழியாக மாற்றக்கோரி அதுவும் சட்டமன்றத்திலே 2006 லையே தீர்மானம் நிறைவேற்றி குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டு அது நிலுவையில் இருக்கும் நிலையில் செம்மொழி மாநாட்டு துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக அது தான் தமிழை உயர் நீதி மன்ற வழக்கு மொழியாக அமர வைக்க சரியான நேரம் என்று தமிழை உயர் நீதிமன்ற வழக்கு மொழியாக்கும் வரை சாகும் வரை உண்ணா  விரதம் இருந்தனர் தமிழை வழக்கு மொழியாக்குவதில் உறுதியான நிலைபாடு உள்ளவராக இருந்திருந்தால் உடனடியாக இது போல் தமிழகத்தில் நெருக்கடி நிலை உருவாகி உள்ளது உடனடியாக குடியரசு தலைவர் இதில் தலையிட்டு இந்த சட்ட அங்கீகாரத்தில் கையெழுத்திட்டால் இன்று வழக்கறிஞர்கள்  திரும்பவும் போராட நேர்ந்து இருக்காது.

7 செப்டம்பர் பொது வேலை நிறுத்தம் வெற்றியும், அது முன் நிறுத்தும் பாட்டாளி வர்க்க கடமையும்

அப்பட்டமாக மறுக்கப்படும் தொழிலாளர்கள் உரிமைகள்
.என்.டி.யு.சி. , ..டி.யு.சி., எஸ்.எம்.எஸ்., சி..டி.யு., ..யு.டி.யு.சி.,  டி.யு.சி.சி. ஆகிய அனைத்து சங்கங்களும்  இணைந்து நாடு தழுவிய பொது வேலை நிறுத்ததிற்கு அழைப்பு விடுத்துள்ளன. விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் , உணவு பண விக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் சட்டங்கள் அப்பட்டமாக மீரப்படுவது ,லாபம் தரும் பொது துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பது , ஆட்குறைப்பு , வேலைநீக்கங்கள், வேலையிழப்பு , ஒப்பந்த தொழிலார் முறை இவ்வாறு தொடர்ந்து செய்து வரும்  தொழிலாளர் விரோத போக்கை கை விடவேண்டும் என்றும்  கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது

Sep 18, 2010

முத்துக்குமாரனின் இறுதி ஊர்வலம் – எனது சாட்சியம் : இயக்குனர் ராம்

 

முத்துக்குமாரன் தந்த பேர் ஆயுதம்மான அவன் சடலத்தோடு இருந்த மூன்று நாட்களில் நான் கண்டவற்றையும் காதில் கேட்டவற்றையும் எனது சாட்சியமாய் பதிவு செய்கிறேன். தீர விசாரித்து மெய் காணும் அரசியல் ஞானம்மோ, அல்லது காண வேண்டிய அவசியத்திற்கான அரசியல் சார்போ என்னிடம் இல்லை. எந்த ஒரு தனிமனிதனின் இயக்கத்தின் உண்மையை அர்ப்பணிப்பை நான் கேள்விக்குள்ளாக்கவும் முயலவில்லை. அவரவர் அவர்களுக்கான நியாயங்களை புறக்கணித்து தம்மைத் தாமே சுய பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டியக் காலத்தில் நாம் இருக்கிறோம் என்பதே நான் உணர்ந்து கொண்ட்து. என்னைப் போல் மூன்று நாட்களும் முத்துக்குமரனோடு இருந்தவர்கள் தங்கள் சாட்சியங்களைப் பதிவு செய்வது வருங்கால வரலாற்றிற்கு உதவும் என நம்புகிறேன்.

Sep 16, 2010

கல்வியை கடை சரக்காகவும், சரக்கை அரசே நடத்தும் அவலம்


தமிழக அரசு கல்வியை கடை சரக்காகவும் , டாஸ்மாக்கை தனது கைகளிலும் வைத்திருக்கும் போதே நமக்கு ஓன்று நன்றாக புரிந்து போயிருக்கும் அரசு இலவச திட்டங்களை அறிவித்து தனது வாக்கு வங்கியை தக்க வைத்து கொள்ளும் நோக்கமே அல்லாமல் நமது வருகால சந்ததியினர் கல்வி கற்று அவர்கள் வாழ்க்கை சிறப்புற விளங்க வேண்டும் என்ற நோக்கம் அரசுக்கு இல்லை என்பது . ஆனால் மக்களின் பல போராட்டங்களின் பயனாக வந்த நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டியின் உத்தரவு வராது வந்த மாமணியாக தனியார் கல்வி நிறுவனகளுக்கு கிடுக்கு பிடி போட்டது. உச்ச நீதிமன்றம் வரை போராடி கல்வி நிறுவனங்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இப்போது சட்டத்தின் ஓட்டைகளை கண்டு பிடித்து கல்வி நிறுவனங்கள் நீதிமன்றத்தில் மீண்டும் தடை ஆணை பெற்று விட்டன இனி அவர்கள் விருப்பத்த்திர்கேற்றவாறு கல்வி கொள்ளை அடிப்பது தொடரும் இதற்கெல்லாம் தீர்வு தரும் வகையில் அரசு உரிய சட்ட திருத்தம் கொண்டு வந்து மக்கள் படும் துன்பத்திற்கு விடுதலை அளிக்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு இல்லை என்றால் இதே அரசு தான் ஒட்டு கேட்டு மக்கள் முன்பு நிற்க வேண்டி வரும் என்பதை நினைவில் கொள்ளுதல் வேண்டும்.

Sep 9, 2010

அப்போது மிகுந்திருந்த இப்போது மலிந்த போன தமிழ் திரைபட பாடல்களில் முற்ப்போக்கு சிந்தனை

சுதந்திர போராட்டமும் தமிழ் சினிமாவும்

தமிழ் திரை பட உலகம் துவக்கம் என்பது சுதந்திர போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த போதிருந்தே துவங்கி விட்டது எனலாம். பொதுவாகவே திரைபடங்கள் நாடகங்களில் இருந்தே வளர்ந்து வந்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். அதை போலவே தமிழ் திரைபட உலகிலும் நாடக கலைஞர்களின் ஆதிக்கம் அதிகம் இருந்தது என்று சொல்லலாம். பல புகழ் பெற்ற நாடக கலைஞர்களும் திரையில் தோன்றினர். அப்போது புராண நாடகங்கள் மட்டுமே அல்லாமல் சுதந்திர உணர்வை தூண்டக்கூடிய பல நாடங்கள் நடந்தன. அந்த நாடக கலைஞர்களில் பலர் சுதந்திர போராட்டங்களில் பங்கு பெற்றவர்கள் பலர் இருந்தனர் இது கலை துறையினருக்கு இயல்பான ஒன்றாக இருந்தது. ‘தியாக பூமி’ போன்ற படங்கள் முழுக்க முழுக்க சுதந்திர உணர்வை மக்களுக்கு ஊட்டுவனவாகவே இருந்தன. அதனால் தான் வெள்ளையர்கள் அரசாங்கம் நாடகத்திற்கும் தணிக்கை முறையை கொண்டு வந்தது அனால் இன்றும் அந்த தணிக்கை தொடர்வது என்பது வெள்ளையர்களுக்கும் ,இப்போது உள்ள கொள்ளையர்கள் அரசுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை. அந்த காலங்களில் நாடகம் நடந்து கொண்டிருக்கும் போதே வெள்ளை அரசாங்கத்திற்கு எதிராக நாடகம் நடத்தியதர்க்காக அந்த ராஜா வேஷத்தோடு கைதான பல நாடக கலைஞர்கள் இருந்தனர். அது இயல்பான ஒன்றாகவும் அப்போதைய சூழ்நிலையில் மக்கள் மத்தியில் எளிதில் சுதந்திர உணர்வை ஊட்டுவனவாகவும் இருந்தது. அவ்வாறு கொடும் அடக்குமுறைகளை எதிர்த்து பாடுவது என்பது அந்த கலைஞர்கள் தங்களின் கடமை என்று கருதினர். அவர்களால் முடிந்த அளவிற்கு நாட்டின் சுதந்திரத்திர்க்கான பங்களிப்பை அவர்கள் ஆற்றினர். அத்தோடு பாரதியாரின் தடை செய்யப்பட்ட நூல்களை பதிப்பித்து வெளியிட்டனர் அந்த பாடல்களை மேடைகளிலும் பாடினர். இவ்வாறு தமிழகமெங்கும் சுதந்திர உணர்வு நிரம்பி ததும்பிய பொற்காலம் என்று சொல்லலாம்.

Sep 8, 2010

திண்ணை பேச்சு வீரர்களிடம்

அடிமை ராச்சியத்தை எதிர்த்து கிளர்ந்து எழுந்தனர் மனிதர்கள் ஆம்,
அவர்கள் தாங்கள் மனிதர்கள் தாங்கள் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற, எண்ணமே அவர்களை எழுப்பியது அதை வழிநடத்தினார் தோழர் ஸ்பாட்டகஸ், ஒற்றுமையின் வலிமையை புரிந்து கொண்டதால் வந்த வெற்றி தான், அடிமைகளின் எழுச்சி அது நமக்கு தருமே எப்போதும் புத்துணர்ச்சி!