எனது பக்கங்கள்






இந்த அரசும் , அரசியலும் ஒரு சார்பாகவே பணம் படைத்தவர்களுக்கு சாதகமாகவே இருக்கிறது ஆனால் பெரும் எண்ணிக்கையில் உள்ளவர்கள் இங்கு ஏழைகளே. அவர்களின் பலமே ஒற்றுமை தான் அந்த ஒற்றுமையை சாதி ,மதம் ,மொழி, போன்றவை துண்டாட பார்க்கின்றன. நாம் அனைவரும் பாட்டாளி வர்க்கம் என்று ஓன்று படுவோம். நமக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்து போராடுவோம்.



Apr 26, 2011

பெண் காவலர்களுக்கு யார் பாதுகாப்பு?



சட்டம் ஒழுங்கை பாராமரிப்பது தான் காவல் துறையின்  வேலை. ரவுடிகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கி மக்கள் பாதுகாப்பாக வாழவும் சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்டுவதுமே காவல் துறையின் தலையாய கடமை ஆகும். சட்டம் ஒழுங்கிற்கு  எங்காவது பாதிப்பு ஏற்படுகிறது என்றால் உடனடியாக பொது மக்கள் தொடர்பு கொள்ளும்படி மக்களின் நண்பர்களாக காவல் துறை இருக்க வேண்டும்.அவ்வாறு காவல் துறை பாரமரிக்கபடவேண்டியது ஒரு மக்கள் நல அரசின் தலையாய கடமை ஆகும் (welfare state ).
அப்படி திறமையாகவும் நேர்மையுடனும் காவல் துறை செயல்படுமானால் இங்கு தேவைக்கு மீறி ஆற்றில்  மணல் எடுப்பது, கனிம வளங்களை விதிகளை மீறி சுரண்டுவது, பொது சொத்துகளை ஆக்கிரமித்து கொள்வது, தொழிலாளர்  உரிமைகள் பறிக்கப்படுவது ,  பணத்திற்காக கொலை செய்வது , திருட்டு , கொள்ளை , பெண்கள் மீது தொடுக்கப்படும் பாலியல் வன்முறை போன்ற அனைத்தும் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்பட்டு ஒரு நல்லாட்சி நடைபெறும் என்று உறுதியாக கூறலாம்.

Apr 22, 2011

108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு இழைக்கப்படும் இன்னல்கள்

தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிற பிரபலமான திட்டம் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவித் திட்டம். திடீர் விபத்து, தீக்காயங்கள், பாம்புக்கடி, வெட்டு குத்து, மாரடைப்பு, தற்கொலை முயற்சி, பிரசவங்கள் இவற்றிற்கெல்லாம் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து உதவுகின்ற அபூர்வ திட்டம் "108" திட்டம். 

வசதி படைத்தாரே பயன்படுத்தி வந்த இந்த வசதியை பாமரர்களுக்கும் கிடைக்கச்செய்து ஏழை எளிய மக்களின் மனதிலும் நம்பிக்கை ஒளிக்கீற்றை ஏற்படுத்தி இருக்கிற திட்டம் 108 ஆம்புலன்ஸ் திட்டம்.

Mar 20, 2011

சேகுவேராவின் நண்பர் ஆல்பர்ட்டோ கிரெனாடோ மரணம் உழைக்கும் வர்க்கத்திற்கு மாபெரும் இழப்பு


உலகின் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்கமுடியாத ஆத்திரத்தால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!” என்று முழங்கிய    மாபெரும் போராளி எர்னஸ்ட் சேகுவேரா. கம்யூனிச சிந்தனையும் மனிதாபிமானமும் நிரம்பிய குடும்பத்தில் பிறத்தவர் சே .இவர்  1948 ஆம் ஆண்டில்  மருத்துவம் படிப்பதற்காக , புவனஸ் அயர்ஸ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். 1951 ஆம் ஆண்டில் படிப்பில் இருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக் கொண்டு , அவரது நண்பரான ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன்  சேர்ந்து கொண்டு, மோட்டார்  சைக்கிளில்  தென்னமெரிக்கா  முழுதும் பயணம் செய்தார். பெரு நாட்டில் அமேசான் ஆற்றங்கரையில் இருந்த தொழுநோயாளர்  குடியேற்றம் ஒன்றில் சில வாரங்கள் தொண்டு செய்வது அவரது இப்பயணத்தின் இறுதி நோக்கமாக இருந்தது. இப்பயணத்தின் போது அவர் எடுத்த குறிப்புக்களைப் பயன்படுத்தி "மோட்டார் சைக்கில் நாட்குறிப்புக்கள்" (The Motorcycle Diaries) என்னும் தலைப்பில் நூலொன்றை எழுதினார். இது பின்னர் நியூயார்க் டைம்சின் அதிக விற்பனை கொண்ட நூலாகத் தெரிவு செய்யப்பட்டது. பின்னர் 2004 இல், இதே பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படம் விருதுகளையும் பெற்றது.

Mar 12, 2011

ஒரிஸ்ஸாவில் இரும்பு ஆலை துணை பொது மேலாளர் எரிப்பும் -தொழிலாளர்களின் கையறுநிலையும்

இந்திய முதலாளித்துவ அரசில் தொழிலாளர் சட்டங்கள் என்று இருப்பவையும் அவை தொழிலாளர்களுக்கு வழங்கும் உரிமைகளும்  மிகவும் சொற்பம் என்றே சொல்லலாம். ஆல் போ  வளரும் வீட்டு வடாகையும், விண்ணை தாண்டி உயர்ந்து கொண்டே போகும் விலைவாசி உயர்வும் தொழிலாளர்களை சொல்லென்ன துயரத்திற்கு ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் இந்திய தொழில் நிறுவனங்கள் ,தொழிலாளர் சட்டங்களை கிஞ்சித்தும் மதிப்பதில்லை இந்த போக்கை ஆளும் முதலாளித்துவ  அரசும் , அந்த அரசின் நலனை பேணிக்காக்கும் நீதிமன்றங்களும் இவ்வாறு காலங்காலமாக தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை, இந்த சுரண்டும் போக்கை கண்டும் , காணாதது போல தனது கண்களை இருக்க மூடிக்கொண்டுள்ளன.

Jan 26, 2011


இந்த 62- வது   குடியரசு தினத்தினை நாம் கொண்டாடா விட்டாலும் நம்மை ஆளும் வர்க்கமும் அவர்களின் ஊதுகுழலான  ஊடகங்களும்  கொண்டாடும் வேலையில் அதை முன்னிட்டு நமது தேர்தல் ஆணையம் தேசிய வாக்காளர் தினமாக ஜனவரி 25ம்  நாளை அறிவித்து உள்ளது. தமிழகத்தில் தேர்தல் நெருங்குவதை ஒட்டி கடந்த ஆறு மாத காலமாகவே தேர்தல் ஆணையம் "கண்ணியமான தேர்தல்" ,” ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுப்பது எப்படி", "வன்முறை அற்ற தேர்தல்களை நடத்துவது நமது கடமை" ,” ஓட்டப்பளிப்பது நமது தேசத்திற்கு செய்யும் மகத்தான தொண்டு" என்று அரசு சார அமைப்புகளோடு இணைந்து கடுமையாக பிரச்சாரம் செய்து வருகிறது. அத்தோடு தமிழக தேர்தல் ஆணையத்திற்கு கூடுதலாக நேர்மையான ஆணையர்களை நியமித்து தேர்தல் குறித்து ஒரு நல்ல கண்ணோட்டத்தை கொண்டு வர அயராது பல நிகழ்சிகளை நடத்தி உள்ளது. அதன் இறுதி வடிவமாக ஜனவரி 25 வது நாளை தேசிய வாக்காளர் தினமாக அறிவித்து உள்ளது. இதற்கு முன்பும் பல தேர்தல்கள் நடைபெற்று உள்ளன. னால் இது போல வாக்காளர்கள் மத்தியில் தேர்தல் ஆணையம்  எந்த பிரச்சாரத்தையும் செய்ததில்லை,  முதன் முதலில் ஏன் இவ்வாறு தேர்தல் ஆணையம் செய்கின்றது என்றால் தேர்தலை நேர்மையான முறையில் நடத்தி இந்தியாவின் புகழை நிலை நாட்ட வேண்டும் என்பதல்ல அதன் நோக்கம்.

Oct 15, 2010

அரிமா அரிமா இந்த தமிழன் பாவம் அரிமா

பட்டுக்கோட்டை கல்யாண  சுந்தரம் , மருதகாசி போன்ற தமிழ்  கவிஞர்கள் மக்களுக்காக பாடினார்கள், இந்த சமூகம் நல்ல பாதையில் நடைபயில வேண்டும், என்ற உயர்ந்த நோக்கத்தோடு ஏழை மக்களுக்கும் புரியும் வகையில் மெட்டமைத்து அவர்கள் படும் துன்பங்களை எடுத்துரைத்தனர். இவ்வாறு ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக அவர்கள் குரல் திரைவானில் ஒலித்தது.

Oct 14, 2010

கோபம், போட்டி, வெறி , பழிவாங்கும் உணர்ச்சி இவை இன்றைய அடிபடை தேவை

ஒரு சிலர் சொல்வது போல சாந்த குணம் கொண்டு மென்மையான வாழ்க்கை நடத்துவது என்பது இன்றைய சூழலில் இயலாத காரியம்.  டார்வின் தத்துவம் போல  சூழ்நிலைக்கு ஏற்ப வாழாத எந்த உயிரும் இந்த பூமியில் வாழ்வதற்கான தகுதியை இழந்து போய் விடும் . இன்று ஊழல் , லஞ்சம் ,நம்பிக்கை துரோகம் என்று பல தீய சக்திகள் போலிஷ், ராணுவ  துணையோடு  கம்பீரமாக  அப்பட்டமாக அநியாயங்களை நிகழ்த்தி கொண்டு உள்ளன.  இது போன்ற வெளிப்டையான அநீதிகளை அடிப்படையாக கொண்ட இந்த சமூகம் அநீதிகள் அற்ற சமூகமாக மாற்றப்பட்ட வேண்டும் என்றால் இந்த சமூகத்தில் சராசரியாக வாழும் நாம் விண்ணை தொடும் விலைவாசி , கல்விகூடங் களில் நிகழும் பகல் கொள்ளைஊழல், ரவுடிகள் துணையோடு ஆளும் இந்த அரசாங்கம் இவை எல்லாம் நீங்கள் மென்மையானவராக இருந்தால் உங்களை துக்கி சாப்பிட்டு விட்டு மென்று துப்பி விடுவார்கள் . 

Oct 11, 2010

ஞயிற்று கிழமை புரட்சியாளர்கள் - யாருக்கு பயன் ?

சிலர் எழுத்திலும், பேச்சிலும் மட்டுமே மாற்றத்தை கொண்டு வந்துவிட முடியும் என்று நினைத்து கொண்டு செயல்பட்டு கொண்டு இருக்கின்றனர். இவர்கள் இந்த நாட்டில் முதலாளித்துவம் உருவாக்கி உள்ள அனைத்து விதமான கலாசார சேறுகளிலும் உருண்டு பிரண்டு கொண்டு  இந்த சமூகத்தை  மாற்றி விடமுடியும் என்று வீணாக புலம்பி கொண்டு திரியும் இவர்களால் இந்த சமூகத்தின் உதிர்ந்து விலப் போகும்  நகத்தை கூட அசைக்க முடியாது என்பது தான் உண்மை. அனைத்து மக்களிடமும் பரஸ்பரம் புரிதல் , நம்பிக்கை ஆகியவற்றை உருவாக்காமல் நாம் இவற்றை சாதிக்க முடியாது. பாகத் சிங்  போன்றவர்களிடம் இருக்கும் தியாக உணர்ச்சியானது இன்று நம் யாரிடமும் இல்லை என்பதுவே உண்மை ஆகும்.  

Sep 25, 2010

ஏசு சொன்ன மீட்பர் மார்க்ஸ் தான்

மோசஸ் தான் முதலில் பத்து கட்டளைகளை மக்களுக்கு வழங்கினார் அவர் புரட்சிகர கருத்துகளை முதன் முதலில் முன் வைத்தார். அவர் வழியில் வந்த ஏசு இப்போது கடவுளின் சாம்ராட்சியத்தை முதன் முதலில் இந்த உலகில் நிறுவினார், என்று இப்போது சொல்லபட்டாலும் அவர் வாழ்ந்த காலத்தில் முற்போக்கானவராக  இருந்தார். கோயிலை வியாபார பொருளாக வைத்திருந்ததை வெளிப்படையாக எதிர்த்தார். அவர் சமயம் என்ற பெயரில் மக்களை சுரண்டபடுவதை எதிர்த்தார்.

Sep 20, 2010

திரு.ஞானிக்கு 'ஒ போடுவோம்'

பல காலமாக ஒற்றை ஆளாக துனிச்சலோடு அரசியல் வாதிகளின் போலி முகத்திரையை கிழித்து வரும் 'வாழும் பாரதி'யாக தான் இன்று திரு .ஞானி நமக்கு தெரிகிறார். இவருடைய 'ஒ பக்கங்கள்' பல பத்திரிக்கைகளில் தொடர்ந்து வெளி வருவது என்பது எங்கும் நடக்காத அதிசியம் தான். இவரை போன்ற அரசியல் விமர்சகர்கள் இருக்கும் சமூகம் நல்ல நீரோட்டம் உள்ள சமூகமாக தான்  இருக்கும்.  தன் மனதில் தோன்றியதை  தெளிவாக தையிரமாக எடுத்து வைக்கும் இவரை நாம் வழிகாட்டியாக எடுத்து கொள்ள வேண்டும். 


காஷ்மீர் நெருப்பு மன்மோகன் மீது தாவுகிறது

காஷ்மீர் பிரச்சனையில் மத்திய அரசு என்ன தான் மூடி மூடி வைத்தாலும் தீ பிடித்து எரியும் வைக்கோல் போரில் கம்பளியை போட்டு அணைப்பது போல தான் முடியும் அந்த வைக்கோல் போர் எரிவதொடு கம்பளியும் ஏறிந்து அதை அனைப்பவனையும் எறிக்கதான் போகிறது காஷ்மீரில் பற்றியுள்ள சுதந்திர தாகம் என்னும் அழியாத நெருப்பு. இலங்கை தமிழர்களின் துயரங்களை பேசும் நாம் முதலில் காஷ்மீர் மக்களின் சுதந்திர போராட்டங்களை பற்றியும் பேச வேண்டும்.
காஷ்மீர் சுதந்திர போராட்டத்தை ஆதரிக்காதவர்கள் கூட இன்று அந்த மக்கள் படும் துன்பங்களை பற்றியும் அங்கு சுட்டு கொள்ளப்படும் குழந்தைகள், பெண்கள் பற்றியும் பேச ஆரம்பித்து விட்டனர். இது இந்திய முதலாளிகளுக்கு சப்பை கட்டு கட்டும் இந்த ஊடக உலகம் மூடி - மூடி வைத்தாலும் வெளியே உண்மைகள் தெரிய தான் செய்கிறது

Sep 19, 2010

உயர் நீதிமன்றத்தில் தமிழுக்காக புது தில்லியில் வழக்கறிஞர்கள் போராட்டம்

கருணாநிதி -  தமிழர்கள் விரோதி

கருணாநிதி தன்னை எப்போதும் முத்தமிழ் காவலராகவே அடையாளப்படுத்தி கொள்ள விரும்புவார். அதற்கேற்றார் போல தமிழகத்திற்கு அறிவிக்கப்படாத அரசவை கவிஞர்களான வாலி , வைரமுத்து போன்றோரும் அவரை எப்போதும் இவர் ஒளிபதிவு கூட சுவர்களுக்குள் முடங்கி கிடந்த தமிழை இவர் தான் பாமரரும் பருகும் படி அனைவருக்கும் தமிழை தந்தவர் என்றும் தமிழை காக்க ,தமிழ் சமூகம் காப்பதுவும் தான் அவரின் தலையாய  பணி  என்று  போற்றி   புகழ்வார்கள். இவர்களின் பிடியில் இருந்து தமிழ் சமுதாயம் விடுபட திணறுவது என்பது தனிக்கதை. அது எவ்வளவு  துரம் மிகவும் தவாறான தகவல் என்பது உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் தமிழர்   தன்  தாய் மொழியாம் தமிழை  உயர் நீதிமன்ற வழக்கு மொழியாக மாற்றக்கோரி அதுவும் சட்டமன்றத்திலே 2006 லையே தீர்மானம் நிறைவேற்றி குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டு அது நிலுவையில் இருக்கும் நிலையில் செம்மொழி மாநாட்டு துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக அது தான் தமிழை உயர் நீதி மன்ற வழக்கு மொழியாக அமர வைக்க சரியான நேரம் என்று தமிழை உயர் நீதிமன்ற வழக்கு மொழியாக்கும் வரை சாகும் வரை உண்ணா  விரதம் இருந்தனர் தமிழை வழக்கு மொழியாக்குவதில் உறுதியான நிலைபாடு உள்ளவராக இருந்திருந்தால் உடனடியாக இது போல் தமிழகத்தில் நெருக்கடி நிலை உருவாகி உள்ளது உடனடியாக குடியரசு தலைவர் இதில் தலையிட்டு இந்த சட்ட அங்கீகாரத்தில் கையெழுத்திட்டால் இன்று வழக்கறிஞர்கள்  திரும்பவும் போராட நேர்ந்து இருக்காது.

7 செப்டம்பர் பொது வேலை நிறுத்தம் வெற்றியும், அது முன் நிறுத்தும் பாட்டாளி வர்க்க கடமையும்

அப்பட்டமாக மறுக்கப்படும் தொழிலாளர்கள் உரிமைகள்
.என்.டி.யு.சி. , ..டி.யு.சி., எஸ்.எம்.எஸ்., சி..டி.யு., ..யு.டி.யு.சி.,  டி.யு.சி.சி. ஆகிய அனைத்து சங்கங்களும்  இணைந்து நாடு தழுவிய பொது வேலை நிறுத்ததிற்கு அழைப்பு விடுத்துள்ளன. விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் , உணவு பண விக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் சட்டங்கள் அப்பட்டமாக மீரப்படுவது ,லாபம் தரும் பொது துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பது , ஆட்குறைப்பு , வேலைநீக்கங்கள், வேலையிழப்பு , ஒப்பந்த தொழிலார் முறை இவ்வாறு தொடர்ந்து செய்து வரும்  தொழிலாளர் விரோத போக்கை கை விடவேண்டும் என்றும்  கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது

Sep 18, 2010

முத்துக்குமாரனின் இறுதி ஊர்வலம் – எனது சாட்சியம் : இயக்குனர் ராம்

 

முத்துக்குமாரன் தந்த பேர் ஆயுதம்மான அவன் சடலத்தோடு இருந்த மூன்று நாட்களில் நான் கண்டவற்றையும் காதில் கேட்டவற்றையும் எனது சாட்சியமாய் பதிவு செய்கிறேன். தீர விசாரித்து மெய் காணும் அரசியல் ஞானம்மோ, அல்லது காண வேண்டிய அவசியத்திற்கான அரசியல் சார்போ என்னிடம் இல்லை. எந்த ஒரு தனிமனிதனின் இயக்கத்தின் உண்மையை அர்ப்பணிப்பை நான் கேள்விக்குள்ளாக்கவும் முயலவில்லை. அவரவர் அவர்களுக்கான நியாயங்களை புறக்கணித்து தம்மைத் தாமே சுய பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டியக் காலத்தில் நாம் இருக்கிறோம் என்பதே நான் உணர்ந்து கொண்ட்து. என்னைப் போல் மூன்று நாட்களும் முத்துக்குமரனோடு இருந்தவர்கள் தங்கள் சாட்சியங்களைப் பதிவு செய்வது வருங்கால வரலாற்றிற்கு உதவும் என நம்புகிறேன்.

Sep 16, 2010

கல்வியை கடை சரக்காகவும், சரக்கை அரசே நடத்தும் அவலம்


தமிழக அரசு கல்வியை கடை சரக்காகவும் , டாஸ்மாக்கை தனது கைகளிலும் வைத்திருக்கும் போதே நமக்கு ஓன்று நன்றாக புரிந்து போயிருக்கும் அரசு இலவச திட்டங்களை அறிவித்து தனது வாக்கு வங்கியை தக்க வைத்து கொள்ளும் நோக்கமே அல்லாமல் நமது வருகால சந்ததியினர் கல்வி கற்று அவர்கள் வாழ்க்கை சிறப்புற விளங்க வேண்டும் என்ற நோக்கம் அரசுக்கு இல்லை என்பது . ஆனால் மக்களின் பல போராட்டங்களின் பயனாக வந்த நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டியின் உத்தரவு வராது வந்த மாமணியாக தனியார் கல்வி நிறுவனகளுக்கு கிடுக்கு பிடி போட்டது. உச்ச நீதிமன்றம் வரை போராடி கல்வி நிறுவனங்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இப்போது சட்டத்தின் ஓட்டைகளை கண்டு பிடித்து கல்வி நிறுவனங்கள் நீதிமன்றத்தில் மீண்டும் தடை ஆணை பெற்று விட்டன இனி அவர்கள் விருப்பத்த்திர்கேற்றவாறு கல்வி கொள்ளை அடிப்பது தொடரும் இதற்கெல்லாம் தீர்வு தரும் வகையில் அரசு உரிய சட்ட திருத்தம் கொண்டு வந்து மக்கள் படும் துன்பத்திற்கு விடுதலை அளிக்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு இல்லை என்றால் இதே அரசு தான் ஒட்டு கேட்டு மக்கள் முன்பு நிற்க வேண்டி வரும் என்பதை நினைவில் கொள்ளுதல் வேண்டும்.