வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் கர்நாடக - தமிழக கூட்டு அதிரடிப்படையும், வனத்துறையும் சேர்ந்து மலை வாழ் கிரமா மக்களுக்கு இளைத்த கொடுமைகள் கொஞ்சம் நஞ்சம் அல்ல. வீரப்பன் பெயரை சொல்லிக்கொண்டு வனத்துறையினரே சந்தனமரங்களை வெட்டி கடத்திக்கொண்டுருந்தனர்.அதற்கு அதிரடிப்படையும், வருவாய் அலுவலர்களும் துணைபோனார்கள்.
எனது பக்கங்கள்
இந்த அரசும் , அரசியலும் ஒரு சார்பாகவே பணம் படைத்தவர்களுக்கு சாதகமாகவே இருக்கிறது ஆனால் பெரும் எண்ணிக்கையில் உள்ளவர்கள் இங்கு ஏழைகளே. அவர்களின் பலமே ஒற்றுமை தான் அந்த ஒற்றுமையை சாதி ,மதம் ,மொழி, போன்றவை துண்டாட பார்க்கின்றன. நாம் அனைவரும் பாட்டாளி வர்க்கம் என்று ஓன்று படுவோம். நமக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்து போராடுவோம்.
Nov 12, 2011
பெட்ரோல் விலை உயர்வு : ஆதாயம் அனைத்தும் முதலாளிகளுக்கே!
இன்று (16.09.2011) பெட்ரோல் விலை உயர்வை ( தனியார் கம்பனி நிர்ணயம் செய்ததை) அரசு அறிவித்துள்ளது. இந்த உயர்வு சாதாரண மக்களுக்கு பேருடியாக அவர்களின் பட்ஜெட்டில் இறங்கியுள்ளது. தனியார் கார், பைக் கம்பனிகள் அது துவங்குவதில் இருந்து குறைந்த விலையில் நிலம், கச்சா பொருள் , குறைந்த கூலி, இயற்றப்பட்ட அனைத்து சட்டங்களையும் மீறும் அதிகாரம், போலிஷ் பாதுகாப்பு, குறைந்த வட்டிக்கு லோன் ஆகிய அனைத்து சலுகைகளையும் வாரி வழங்குகிறது அரசு . 1 லட்சத்திற்கு கார் என அறிவித்து அனைத்து சாலைகளும் போக்குவரத்து நெரிசலில் தள்ளாடுகிறது. தவணை முறையில் கடன் கொடுத்து கண்ணுக்கு தெரியாமல் அதிக வட்டியை பைனான்ஸ் கம்பனிகள் பிடுங்குகின்றன. அரசும் பொது போக்குவரத்தை தன்னால் முடிந்த மட்டும் குறைத்து வருகிறது, கட்டணங்களை மறைமுகமாக ஏற்றி வருகிறது.
ஊழல்வாதிகளுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பும் , சாதாரண மக்களுக்கு வெடிகுண்டும்
உலகிலையே அதிகம் ஊழல் செய்யும் நமது அரசியல்வாதிகளுக்கு, மூன்று அடுக்கு, நான்கு அடுக்கு ஒய் , இசட் , இசட் பிளஸ் பாதுகாப்பும் ,பற்றாக்குறைக்கு கருப்பு பூனைப்படை , குண்டு துளைக்காத வாகனகங்கள் ,தனி விமானங்கள் என்று அவர்கள் ஊழல் செய்வதற்கு அனைத்து பாதுகாப்பையும் இந்த அரசுகள் செய்து கொடுக்கின்றன.அப்படியே ஊழல் , கொலை , நில அபகரிப்பு போன்ற வழக்குகளில் கைதானால் கூட ஜெயிலிலும் சொகுசு வாழ்க்கை , பாதுகாப்பு வளையங்கள் சூழவே வளம் வருகிறார்கள். ஏனெனில் இவர்கள் பணம் ,அதிகாரம் படைத்தவர்கள், சூழ்ச்சிகாரர்கள், காரியவாதிகள், சுரண்டல்வாதிகள். முதலாளிகள் , முதலாளிகளின் அடிவருடிகள்.
May 31, 2011
சமச்சீராகுமா கல்வி
தமிழக அரசின் கல்வி முதலாளிகளுக்கு ஆதரவான போக்கும் ,அரசு பள்ளிகளின் அவல நிலையும்
கல்வி என்பது அனைவருக்கும் இலவசமாக கிடைக்கவேண்டும். அதுவும் தரமான கல்வியாக இருக்கவேண்டும், என்பது இன்றுள்ள அனைத்து பெற்றோர்களின் நியாயமான எதிர்பார்ப்பாகும். தமிழகத்தில் அரசு பள்ளிகளுகென்று தனியான பாடத்திட்டமும் , மெட்ரிக் பள்ளிகளுகென்று தனியான பாடத்திட்டமும் இருக்கிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு கடும் போட்டி நிலவும் வேலைச்சந்தையில் போட்டியிடக்கூடிய எந்த வலுவும் தர இயலாததாக அரசு பள்ளிகளுக்கான பாடத்திட்டம் இருக்கிறது என்பது தான் இன்றுள்ள நிலைமை.
Apr 26, 2011
பெண் காவலர்களுக்கு யார் பாதுகாப்பு?
சட்டம் ஒழுங்கை பாராமரிப்பது தான் காவல் துறையின் வேலை. ரவுடிகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கி மக்கள் பாதுகாப்பாக வாழவும் சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்டுவதுமே காவல் துறையின் தலையாய கடமை ஆகும். சட்டம் ஒழுங்கிற்கு எங்காவது பாதிப்பு ஏற்படுகிறது என்றால் உடனடியாக பொது மக்கள் தொடர்பு கொள்ளும்படி மக்களின் நண்பர்களாக காவல் துறை இருக்க வேண்டும்.அவ்வாறு காவல் துறை பாரமரிக்கபடவேண்டியது ஒரு மக்கள் நல அரசின் தலையாய கடமை ஆகும் (welfare state ).
அப்படி திறமையாகவும் நேர்மையுடனும் காவல் துறை செயல்படுமானால் இங்கு தேவைக்கு மீறி ஆற்றில் மணல் எடுப்பது, கனிம வளங்களை விதிகளை மீறி சுரண்டுவது, பொது சொத்துகளை ஆக்கிரமித்து கொள்வது, தொழிலாளர் உரிமைகள் பறிக்கப்படுவது , பணத்திற்காக கொலை செய்வது , திருட்டு , கொள்ளை , பெண்கள் மீது தொடுக்கப்படும் பாலியல் வன்முறை போன்ற அனைத்தும் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்பட்டு ஒரு நல்லாட்சி நடைபெறும் என்று உறுதியாக கூறலாம்.
Apr 22, 2011
108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு இழைக்கப்படும் இன்னல்கள்
தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிற பிரபலமான திட்டம் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவித் திட்டம். திடீர் விபத்து, தீக்காயங்கள், பாம்புக்கடி, வெட்டு குத்து, மாரடைப்பு, தற்கொலை முயற்சி, பிரசவங்கள் இவற்றிற்கெல்லாம் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து உதவுகின்ற அபூர்வ திட்டம் "108" திட்டம்.
வசதி படைத்தாரே பயன்படுத்தி வந்த இந்த வசதியை பாமரர்களுக்கும் கிடைக்கச்செய்து ஏழை எளிய மக்களின் மனதிலும் நம்பிக்கை ஒளிக்கீற்றை ஏற்படுத்தி இருக்கிற திட்டம் 108 ஆம்புலன்ஸ் திட்டம்.
Mar 20, 2011
சேகுவேராவின் நண்பர் ஆல்பர்ட்டோ கிரெனாடோ மரணம் உழைக்கும் வர்க்கத்திற்கு மாபெரும் இழப்பு
“உலகின் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்கமுடியாத ஆத்திரத்தால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!” என்று முழங்கிய மாபெரும் போராளி எர்னஸ்ட் சேகுவேரா. கம்யூனிச சிந்தனையும் மனிதாபிமானமும் நிரம்பிய குடும்பத்தில் பிறத்தவர் சே .இவர் 1948 ஆம் ஆண்டில் மருத்துவம் படிப்பதற்காக , புவனஸ் அயர்ஸ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். 1951 ஆம் ஆண்டில் படிப்பில் இருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக் கொண்டு , அவரது நண்பரான ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சேர்ந்து கொண்டு, மோட்டார் சைக்கிளில் தென்னமெரிக்கா முழுதும் பயணம் செய்தார். பெரு நாட்டில் அமேசான் ஆற்றங்கரையில் இருந்த தொழுநோயாளர் குடியேற்றம் ஒன்றில் சில வாரங்கள் தொண்டு செய்வது அவரது இப்பயணத்தின் இறுதி நோக்கமாக இருந்தது. இப்பயணத்தின் போது அவர் எடுத்த குறிப்புக்களைப் பயன்படுத்தி "மோட்டார் சைக்கில் நாட்குறிப்புக்கள்" (The Motorcycle Diaries) என்னும் தலைப்பில் நூலொன்றை எழுதினார். இது பின்னர் நியூயார்க் டைம்சின் அதிக விற்பனை கொண்ட நூலாகத் தெரிவு செய்யப்பட்டது. பின்னர் 2004 இல், இதே பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படம் விருதுகளையும் பெற்றது.
Mar 12, 2011
ஒரிஸ்ஸாவில் இரும்பு ஆலை துணை பொது மேலாளர் எரிப்பும் -தொழிலாளர்களின் கையறுநிலையும்
இந்திய முதலாளித்துவ அரசில் தொழிலாளர் சட்டங்கள் என்று இருப்பவையும் அவை தொழிலாளர்களுக்கு வழங்கும் உரிமைகளும் மிகவும் சொற்பம் என்றே சொல்லலாம். ஆல் போல வளரும் வீட்டு வடாகையும், விண்ணை தாண்டி உயர்ந்து கொண்டே போகும் விலைவாசி உயர்வும் தொழிலாளர்களை சொல்லென்ன துயரத்திற்கு ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் இந்திய தொழில் நிறுவனங்கள் ,தொழிலாளர் சட்டங்களை கிஞ்சித்தும் மதிப்பதில்லை இந்த போக்கை ஆளும் முதலாளித்துவ அரசும் , அந்த அரசின் நலனை பேணிக்காக்கும் நீதிமன்றங்களும் இவ்வாறு காலங்காலமாக தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை, இந்த சுரண்டும் போக்கை கண்டும் , காணாதது போல தனது கண்களை இருக்க மூடிக்கொண்டுள்ளன. Jan 26, 2011
இந்த 62- வது குடியரசு தினத்தினை நாம் கொண்டாடா விட்டாலும் நம்மை ஆளும் வர்க்கமும் அவர்களின் ஊதுகுழலான ஊடகங்களும் கொண்டாடும் வேலையில் அதை முன்னிட்டு நமது தேர்தல் ஆணையம் தேசிய வாக்காளர் தினமாக ஜனவரி 25ம் நாளை அறிவித்து உள்ளது. தமிழகத்தில் தேர்தல் நெருங்குவதை ஒட்டி கடந்த ஆறு மாத காலமாகவே தேர்தல் ஆணையம் "கண்ணியமான தேர்தல்" ,” ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுப்பது எப்படி", "வன்முறை அற்ற தேர்தல்களை நடத்துவது நமது கடமை" ,” ஓட்டப்பளிப்பது நமது தேசத்திற்கு செய்யும் மகத்தான தொண்டு" என்று அரசு சார அமைப்புகளோடு இணைந்து கடுமையாக பிரச்சாரம் செய்து வருகிறது. அத்தோடு தமிழக தேர்தல் ஆணையத்திற்கு கூடுதலாக நேர்மையான ஆணையர்களை நியமித்து தேர்தல் குறித்து ஒரு நல்ல கண்ணோட்டத்தை கொண்டு வர அயராது பல நிகழ்சிகளை நடத்தி உள்ளது. அதன் இறுதி வடிவமாக ஜனவரி 25 வது நாளை தேசிய வாக்காளர் தினமாக அறிவித்து உள்ளது. இதற்கு முன்பும் பல தேர்தல்கள் நடைபெற்று உள்ளன. ஆனால் இது போல வாக்காளர்கள் மத்தியில் தேர்தல் ஆணையம் எந்த பிரச்சாரத்தையும் செய்ததில்லை, முதன் முதலில் ஏன் இவ்வாறு தேர்தல் ஆணையம் செய்கின்றது என்றால் தேர்தலை நேர்மையான முறையில் நடத்தி இந்தியாவின் புகழை நிலை நாட்ட வேண்டும் என்பதல்ல அதன் நோக்கம்.
Oct 15, 2010
அரிமா அரிமா இந்த தமிழன் பாவம் அரிமா
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் , மருதகாசி போன்ற தமிழ் கவிஞர்கள் மக்களுக்காக பாடினார்கள், இந்த சமூகம் நல்ல பாதையில் நடைபயில வேண்டும், என்ற உயர்ந்த நோக்கத்தோடு ஏழை மக்களுக்கும் புரியும் வகையில் மெட்டமைத்து அவர்கள் படும் துன்பங்களை எடுத்துரைத்தனர். இவ்வாறு ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக அவர்கள் குரல் திரைவானில் ஒலித்தது.
Oct 14, 2010
கோபம், போட்டி, வெறி , பழிவாங்கும் உணர்ச்சி இவை இன்றைய அடிபடை தேவை
ஒரு சிலர் சொல்வது போல சாந்த குணம் கொண்டு மென்மையான வாழ்க்கை நடத்துவது என்பது இன்றைய சூழலில் இயலாத காரியம். டார்வின் தத்துவம் போல சூழ்நிலைக்கு ஏற்ப வாழாத எந்த உயிரும் இந்த பூமியில் வாழ்வதற்கான தகுதியை இழந்து போய் விடும் . இன்று ஊழல் , லஞ்சம் ,நம்பிக்கை துரோகம் என்று பல தீய சக்திகள் போலிஷ், ராணுவ துணையோடு கம்பீரமாக அப்பட்டமாக அநியாயங்களை நிகழ்த்தி கொண்டு உள்ளன. இது போன்ற வெளிப்படையான அநீதிகளை அடிப்படையாக கொண்ட இந்த சமூகம் அநீதிகள் அற்ற சமூகமாக மாற்றப்பட்ட வேண்டும் என்றால் இந்த சமூகத்தில் சராசரியாக வாழும் நாம் விண்ணை தொடும் விலைவாசி , கல்விகூடங் களில் நிகழும் பகல் கொள்ளை, ஊழல், ரவுடிகள் துணையோடு ஆளும் இந்த அரசாங்கம் இவை எல்லாம் நீங்கள் மென்மையானவராக இருந்தால் உங்களை துக்கி சாப்பிட்டு விட்டு மென்று துப்பி விடுவார்கள் .
Oct 11, 2010
ஞயிற்று கிழமை புரட்சியாளர்கள் - யாருக்கு பயன் ?
சிலர் எழுத்திலும், பேச்சிலும் மட்டுமே மாற்றத்தை கொண்டு வந்துவிட முடியும் என்று நினைத்து கொண்டு செயல்பட்டு கொண்டு இருக்கின்றனர். இவர்கள் இந்த நாட்டில் முதலாளித்துவம் உருவாக்கி உள்ள அனைத்து விதமான கலாசார சேறுகளிலும் உருண்டு பிரண்டு கொண்டு இந்த சமூகத்தை மாற்றி விடமுடியும் என்று வீணாக புலம்பி கொண்டு திரியும் இவர்களால் இந்த சமூகத்தின் உதிர்ந்து விலப் போகும் நகத்தை கூட அசைக்க முடியாது என்பது தான் உண்மை. அனைத்து மக்களிடமும் பரஸ்பரம் புரிதல் , நம்பிக்கை ஆகியவற்றை உருவாக்காமல் நாம் இவற்றை சாதிக்க முடியாது. பாகத் சிங் போன்றவர்களிடம் இருக்கும் தியாக உணர்ச்சியானது இன்று நம் யாரிடமும் இல்லை என்பதுவே உண்மை ஆகும்.
Sep 25, 2010
ஏசு சொன்ன மீட்பர் மார்க்ஸ் தான்
மோசஸ் தான் முதலில் பத்து கட்டளைகளை மக்களுக்கு வழங்கினார் அவர் புரட்சிகர கருத்துகளை முதன் முதலில் முன் வைத்தார். அவர் வழியில் வந்த ஏசு இப்போது கடவுளின் சாம்ராட்சியத்தை முதன் முதலில் இந்த உலகில் நிறுவினார், என்று இப்போது சொல்லபட்டாலும் அவர் வாழ்ந்த காலத்தில் முற்போக்கானவராக இருந்தார். கோயிலை வியாபார பொருளாக வைத்திருந்ததை வெளிப்படையாக எதிர்த்தார். அவர் சமயம் என்ற பெயரில் மக்களை சுரண்டபடுவதை எதிர்த்தார்.
Sep 20, 2010
திரு.ஞானிக்கு 'ஒ போடுவோம்'
பல காலமாக ஒற்றை ஆளாக துனிச்சலோடு அரசியல் வாதிகளின் போலி முகத்திரையை கிழித்து வரும் 'வாழும் பாரதி'யாக தான் இன்று திரு .ஞானி நமக்கு தெரிகிறார். இவருடைய 'ஒ பக்கங்கள்' பல பத்திரிக்கைகளில் தொடர்ந்து வெளி வருவது என்பது எங்கும் நடக்காத அதிசியம் தான். இவரை போன்ற அரசியல் விமர்சகர்கள் இருக்கும் சமூகம் நல்ல நீரோட்டம் உள்ள சமூகமாக தான் இருக்கும். தன் மனதில் தோன்றியதை தெளிவாக தையிரமாக எடுத்து வைக்கும் இவரை நாம் வழிகாட்டியாக எடுத்து கொள்ள வேண்டும்.
காஷ்மீர் நெருப்பு மன்மோகன் மீது தாவுகிறது
காஷ்மீர் பிரச்சனையில் மத்திய அரசு என்ன தான் மூடி - மூடி வைத்தாலும் தீ பிடித்து எரியும் வைக்கோல் போரில் கம்பளியை போட்டு அணைப்பது போல தான் முடியும் அந்த வைக்கோல் போர் எரிவதொடு கம்பளியும் ஏறிந்து அதை அனைப்பவனையும் எறிக்கதான் போகிறது காஷ்மீரில் பற்றியுள்ள சுதந்திர தாகம் என்னும் அழியாத நெருப்பு. இலங்கை தமிழர்களின் துயரங்களை பேசும் நாம் முதலில் காஷ்மீர் மக்களின் சுதந்திர போராட்டங்களை பற்றியும் பேச வேண்டும்.
காஷ்மீர் சுதந்திர போராட்டத்தை ஆதரிக்காதவர்கள் கூட இன்று அந்த மக்கள் படும் துன்பங்களை பற்றியும் அங்கு சுட்டு கொள்ளப்படும் குழந்தைகள், பெண்கள் பற்றியும் பேச ஆரம்பித்து விட்டனர். இது இந்திய முதலாளிகளுக்கு சப்பை கட்டு கட்டும் இந்த ஊடக உலகம் மூடி - மூடி வைத்தாலும் வெளியே உண்மைகள் தெரிய தான் செய்கிறது
Subscribe to:
Posts (Atom)












