ஒரு சிலர் சொல்வது போல சாந்த குணம் கொண்டு மென்மையான வாழ்க்கை நடத்துவது என்பது இன்றைய சூழலில் இயலாத காரியம். டார்வின் தத்துவம் போல சூழ்நிலைக்கு ஏற்ப வாழாத எந்த உயிரும் இந்த பூமியில் வாழ்வதற்கான தகுதியை இழந்து போய் விடும் . இன்று ஊழல் , லஞ்சம் ,நம்பிக்கை துரோகம் என்று பல தீய சக்திகள் போலிஷ், ராணுவ துணையோடு கம்பீரமாக அப்பட்டமாக அநியாயங்களை நிகழ்த்தி கொண்டு உள்ளன. இது போன்ற வெளிப்படையான அநீதிகளை அடிப்படையாக கொண்ட இந்த சமூகம் அநீதிகள் அற்ற சமூகமாக மாற்றப்பட்ட வேண்டும் என்றால் இந்த சமூகத்தில் சராசரியாக வாழும் நாம் விண்ணை தொடும் விலைவாசி , கல்விகூடங் களில் நிகழும் பகல் கொள்ளை, ஊழல், ரவுடிகள் துணையோடு ஆளும் இந்த அரசாங்கம் இவை எல்லாம் நீங்கள் மென்மையானவராக இருந்தால் உங்களை துக்கி சாப்பிட்டு விட்டு மென்று துப்பி விடுவார்கள் .