எனது பக்கங்கள்






இந்த அரசும் , அரசியலும் ஒரு சார்பாகவே பணம் படைத்தவர்களுக்கு சாதகமாகவே இருக்கிறது ஆனால் பெரும் எண்ணிக்கையில் உள்ளவர்கள் இங்கு ஏழைகளே. அவர்களின் பலமே ஒற்றுமை தான் அந்த ஒற்றுமையை சாதி ,மதம் ,மொழி, போன்றவை துண்டாட பார்க்கின்றன. நாம் அனைவரும் பாட்டாளி வர்க்கம் என்று ஓன்று படுவோம். நமக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்து போராடுவோம்.



Sep 19, 2010

உயர் நீதிமன்றத்தில் தமிழுக்காக புது தில்லியில் வழக்கறிஞர்கள் போராட்டம்

கருணாநிதி -  தமிழர்கள் விரோதி

கருணாநிதி தன்னை எப்போதும் முத்தமிழ் காவலராகவே அடையாளப்படுத்தி கொள்ள விரும்புவார். அதற்கேற்றார் போல தமிழகத்திற்கு அறிவிக்கப்படாத அரசவை கவிஞர்களான வாலி , வைரமுத்து போன்றோரும் அவரை எப்போதும் இவர் ஒளிபதிவு கூட சுவர்களுக்குள் முடங்கி கிடந்த தமிழை இவர் தான் பாமரரும் பருகும் படி அனைவருக்கும் தமிழை தந்தவர் என்றும் தமிழை காக்க ,தமிழ் சமூகம் காப்பதுவும் தான் அவரின் தலையாய  பணி  என்று  போற்றி   புகழ்வார்கள். இவர்களின் பிடியில் இருந்து தமிழ் சமுதாயம் விடுபட திணறுவது என்பது தனிக்கதை. அது எவ்வளவு  துரம் மிகவும் தவாறான தகவல் என்பது உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் தமிழர்   தன்  தாய் மொழியாம் தமிழை  உயர் நீதிமன்ற வழக்கு மொழியாக மாற்றக்கோரி அதுவும் சட்டமன்றத்திலே 2006 லையே தீர்மானம் நிறைவேற்றி குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டு அது நிலுவையில் இருக்கும் நிலையில் செம்மொழி மாநாட்டு துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக அது தான் தமிழை உயர் நீதி மன்ற வழக்கு மொழியாக அமர வைக்க சரியான நேரம் என்று தமிழை உயர் நீதிமன்ற வழக்கு மொழியாக்கும் வரை சாகும் வரை உண்ணா  விரதம் இருந்தனர் தமிழை வழக்கு மொழியாக்குவதில் உறுதியான நிலைபாடு உள்ளவராக இருந்திருந்தால் உடனடியாக இது போல் தமிழகத்தில் நெருக்கடி நிலை உருவாகி உள்ளது உடனடியாக குடியரசு தலைவர் இதில் தலையிட்டு இந்த சட்ட அங்கீகாரத்தில் கையெழுத்திட்டால் இன்று வழக்கறிஞர்கள்  திரும்பவும் போராட நேர்ந்து இருக்காது.

7 செப்டம்பர் பொது வேலை நிறுத்தம் வெற்றியும், அது முன் நிறுத்தும் பாட்டாளி வர்க்க கடமையும்

அப்பட்டமாக மறுக்கப்படும் தொழிலாளர்கள் உரிமைகள்
.என்.டி.யு.சி. , ..டி.யு.சி., எஸ்.எம்.எஸ்., சி..டி.யு., ..யு.டி.யு.சி.,  டி.யு.சி.சி. ஆகிய அனைத்து சங்கங்களும்  இணைந்து நாடு தழுவிய பொது வேலை நிறுத்ததிற்கு அழைப்பு விடுத்துள்ளன. விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் , உணவு பண விக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் சட்டங்கள் அப்பட்டமாக மீரப்படுவது ,லாபம் தரும் பொது துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பது , ஆட்குறைப்பு , வேலைநீக்கங்கள், வேலையிழப்பு , ஒப்பந்த தொழிலார் முறை இவ்வாறு தொடர்ந்து செய்து வரும்  தொழிலாளர் விரோத போக்கை கை விடவேண்டும் என்றும்  கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது