கருணாநிதி - தமிழர்கள் விரோதி
கருணாநிதி தன்னை எப்போதும் முத்தமிழ் காவலராகவே அடையாளப்படுத்தி கொள்ள விரும்புவார். அதற்கேற்றார் போல தமிழகத்திற்கு அறிவிக்கப்படாத அரசவை கவிஞர்களான வாலி , வைரமுத்து போன்றோரும் அவரை எப்போதும் இவர் ஒளிபதிவு கூட சுவர்களுக்குள் முடங்கி கிடந்த தமிழை இவர் தான் பாமரரும் பருகும் படி அனைவருக்கும் தமிழை தந்தவர் என்றும் தமிழை காக்க ,தமிழ் சமூகம் காப்பதுவும் தான் அவரின் தலையாய பணி என்று போற்றி புகழ்வார்கள். இவர்களின் பிடியில் இருந்து தமிழ் சமுதாயம் விடுபட திணறுவது என்பது தனிக்கதை. அது எவ்வளவு துரம் மிகவும் தவாறான தகவல் என்பது உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் தமிழர் தன் தாய் மொழியாம் தமிழை உயர் நீதிமன்ற வழக்கு மொழியாக மாற்றக்கோரி அதுவும் சட்டமன்றத்திலே 2006 லையே தீர்மானம் நிறைவேற்றி குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டு அது நிலுவையில் இருக்கும் நிலையில் செம்மொழி மாநாட்டு துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக அது தான் தமிழை உயர் நீதி மன்ற வழக்கு மொழியாக அமர வைக்க சரியான நேரம் என்று தமிழை உயர் நீதிமன்ற வழக்கு மொழியாக்கும் வரை சாகும் வரை உண்ணா விரதம் இருந்தனர் தமிழை வழக்கு மொழியாக்குவதில் உறுதியான நிலைபாடு உள்ளவராக இருந்திருந்தால் உடனடியாக இது போல் தமிழகத்தில் நெருக்கடி நிலை உருவாகி உள்ளது உடனடியாக குடியரசு தலைவர் இதில் தலையிட்டு இந்த சட்ட அங்கீகாரத்தில் கையெழுத்திட்டால் இன்று வழக்கறிஞர்கள் திரும்பவும் போராட நேர்ந்து இருக்காது.