மோசஸ் தான் முதலில் பத்து கட்டளைகளை மக்களுக்கு வழங்கினார் அவர் புரட்சிகர கருத்துகளை முதன் முதலில் முன் வைத்தார். அவர் வழியில் வந்த ஏசு இப்போது கடவுளின் சாம்ராட்சியத்தை முதன் முதலில் இந்த உலகில் நிறுவினார், என்று இப்போது சொல்லபட்டாலும் அவர் வாழ்ந்த காலத்தில் முற்போக்கானவராக இருந்தார். கோயிலை வியாபார பொருளாக வைத்திருந்ததை வெளிப்படையாக எதிர்த்தார். அவர் சமயம் என்ற பெயரில் மக்களை சுரண்டபடுவதை எதிர்த்தார்.